பக்கம்:ஈசாப் கதைப் பாடல்கள்.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

என்றதும். உடனே ரோஜாப்பூ
புன்சிரிப் புடனே கூறியது:

‘ஆமாம்,வாடா மல்லிகையே.
ஆயினும், இந்த உலகினிலே

எத்தனை நாட்கள் வாழ்கின்றேன்?
எனது வாழ்வே ஒருநாள்தான்.

மனிதர் என்னைப் பறித்ததுமே
மனமும் உடலும் வாடுகிறேன்.

அவர்கள் என்னைப் பறிக்காமல்
அப்படி யேதான் விட்டிடினும்,

மறுநாள் கீழே வீழ்கின்றேன்.
மண்ணொடு மண்ணாய்ப் போகின்றேன்.

அழகும் மணமும் இருந்திடினும்
அடியேன் உன்போல் பலநாட்கள்

உலகில் வாழ முடிந்திடுமோ?

உரைப்பாய், வாடா மல்லிகையே!’

116