பக்கம்:ஈசாப் கதைப் பாடல்கள்.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

“என்னப்பா இது! கனமில்லாத சுமையாக வேண்டுமென்று கேட்டாய். இவ்வளவு பெரிய கூடையைத் தூக்கிக் கொண்டிருக்கிறாயே!” என்றார்கள்.

ஈசாப் ஒன்றும் பதில் கூறவில்லை.

ஆனால், ஈசாப் ஒரு முட்டாளல்ல என்பதை அவருடைய நண்பர்கள் தெரிந்து கொள்ள வெகு நேரமாகவில்லை. ஈசாப் வைத்திருந்த கூடையிலிருந்த ரொட்டிகளை, வேளா வேளைக்கு அவர்கள் எடுத்துத் தின்று வந்ததால், கனம் குறைந்து கொண்டே வந்தது. செல்ல வேண்டிய ஊரை நெருங்கும் போது, ஈசாப் வெறும் கூடையுடன் ஆனந்தமாக நடந்து சென்றார். ஆனால், மற்றவர்கள் அப்படிச் செல்லவில்லை; போகப் போக அவர்கள் சுமையைத் தூக்க முடியாமல் அலுத்துப் போய் விட்டனர்.

அப்போதுதான் அவர்கள் ஈசாப்பின் புத்திசாலித்தனத்தை உணர்ந்தனர்!

ஈசாப் வசித்த ஊரில் பொது மக்கள் குளிப்பதற்காக ஒரு குளம் அமைக்கப்பட்டிருந்தது.

அன்று ஈசாப்பின் எஜமானர், அந்தக் குளத்தில் குளிக்க எண்ணினார். உடனே ஈசாப்பை அழைத்து, அந்தக் குளத்தில் கூட்டம் இருக்கிறதா என்று பார்த்து வரச் சொன்னார். ஈசாப் போய்ப் பார்த்தார்.

அப்போது அந்தக் குளத்தின் வாயிலில் நீளமான ஒரு கல் கிடந்தது.

குளிக்கச் செல்வோரில் சிவர் அதைத் தாண்டிக் கொண்டு சென்றனர்; சிலர் அதில் தடுக்கி விழுந்து, பிறகு எழுந்து சென்றனர். ஆனால், ஒருவர் கூட அதை அப்புறப்படுத்தவில்லை. ஈசாப் இந்தக் காட்சியைக் கொஞ்ச நேரம் பார்த்துக் கொண்டிருந்தார். அதே சமயம் அங்கு வந்தார் ஒருவர். அவர் அந்தக் கல்லைத் தூக்கி, ஓர் ஓரத்தில் போட்டு விட்டுக் குளிக்கச் சென்றார்.

119