இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
ஊரின் அருகே அழகாக
உள்ள ஆற்றங் கரைவழியே
சென்றார் ஒருவர். அப்பொழுது
செவிகளில் வீழ்ந்தது குரலொன்று.
“ஐயோ! அப்பா!” எனும் சத்தம்
ஆற்றின் நடுவே கேட்டிடவே,
சத்தம் வந்த திசைதனிலே
‘சட்’டெனப் பார்த்தார் அம்மனிதர்.
பையன் ஒருவன் தண்ணீரில்
பரிதவிப் பதையே கண்டனரே.
கண்டதும் அவனை உடனேயே
காத்திடும் வழியைத் தேடாமல்,
“ஏண்டா, முட்டாள் பயலேநீ
இதனில் இறங்கிட லாமோடா?
எத்தனை பேர்கள் இதில் இறங்கி
இறந்தனர்! நீயும் அறியாயோ?
எனது புத்தி மதிகளை நீ
என்றும் கேட்டு நடந்திடுவாய்
அவையே உனக்கு எப்பொழுதும்
அதிகத் துணையாய் நிற்குமடா”
11