பக்கம்:ஈசாப் கதைப் பாடல்கள்.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஈசாப் உடனே திரும்பித் தம் எஜமானரிடம் சென்று, குளத்தில் ஒரே ஒரு மனிதர்தான் குளித்துக் கொண்டிருக் கிஞர்' என்ருர்,

  • சரி, போய்க் குளித்துவிட்டு வருகிறேன்' என்று. எஜமானர் புறப்பட்டுக் குளத்திற்குச் சென்ருள்.

அங்கு ஏராளமானவர்கள் குளித்துக்கொண்டிருந்தனர். உடனே எஜமானருக்கு ஈசாப்பின் மேல் கோபம் வந்துவிட்டது. வேகமாக வீட்டுக்குத் திரும்பி வந்தார். ஈசாப்பை அழைத்து, "உனக்கென்ன, கண் பொட்டையா? குளத்தில் எத்தனை பேர் குளிக்கிருள்கள்? ஒரே ஒருவர் குளிப்பதாகக் கூறிஞயே!”. என்று கேட்டார்.

    • ஆம் எஜமானே, அவர் ஒருவர்தான் மனிதர்! வழியிலே கிடக்த கல்லை. அப்புறப்படுத்தி, மற்றவர்களை விழாமல் காப்பாற்றிய அவர் ஒருவர்தான் மனிதர்!" என்ருர் ஈசாப்.

தடுக்கி விழவைக்கும் கல்லேக் கண்டும், பேசாமல் சென்று. குளித்துக்கொண்டிருந்தார்களே, அவர்களை மனிதர் என்று சொல்ல விரும்பவில்லே, நம் ஈசாப். இதை அறிந்த எஜமானர் சசாப்பின் புத்தி நுட்பத்தைப் பாராட்டினர். இப்படி ஈசாப்பைப் பற்றி எத்தனையோ கதைகள் ! ஈசாப்பின் கருத்துக்கள் சாகா வரம் பெற்றவை. அவை: இக்தக் காலத்துக்கு மட்டுமல்ல; எந்தக் காலத்துக்குமே பயன் தரக் கூடியவை.