பக்கம்:ஈசாப் கதைப் பாடல்கள்.pdf/14

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

என்றே அவரும் கூறுகையில்
ஏங்கித் தவித்த அப்பையன்,

“ஐயா, உயிரோ போகிறதே!
அடியேன் பிழைத்திட இப்பொழுதே

உதவி செய்தால் பலனுண்டு.
யோசனை அப்புறம் கூறிடலாம்.

ஐயோ! உதவி உதவி!” என
அலறினன். உடனே அம்மனிதர்

உணர்ந்தனர் பையன் நிலைமைதனை;
உடனே ஆற்றில் பாய்ந்தனரே !

பாய்ந்தே அவனைக் கரைதனிலே
பத்திர மாகச் சேர்த்தனரே !

சிறுவன் பிழைத்தான், அவருடைய
சிறந்த உதவி பெற்றதனால்.

உதவி எதுவும் செய்யாமல்
யோசனை சொல்வதில் பலனுண்டோ ?

‘இல்லை, இல்லை’ என்றேதான்
இக்கதை மூலம் உணர்கின்றோம்.

12