பக்கம்:ஈசாப் கதைப் பாடல்கள்.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குனிந்து ஈக்பீக், ஈக் எனவே குரலை எழுப்பினன். எழுப்பியதும், - மனிதன் சத்தம் போடுதல்போல் மடையன் இவனும் போடுகிருன். பன்றி இதுபோல் கத்தாது. பார்ப்போர் தம்மை ஏய்க்கின்ருன்’ என்ருர் சிலபேர். மற்றவரும் ஏளன மாகப் பேசினரே. கோமா வரியினைத் தோற்கடிக்கக் கொஞ்சமும் முடியா தென்றிடவே, "ஆமாம், ஆமாம்” என்றுடனே அனைவரும் கூச்சல் போட்டனரே. சத்தம் கேட்டும் முனியாண்டி சற்றும் தயக்கம் இல்லாமல் வித்தை காட்டினன். ஆலுைம், மிகவும் கூச்சல் கேட்டதுவே. கையைத் தட்டி அனைவருமே கலகம் செய்தனர். முனியாண்டி, "ஐயா, சபையில் இருப்பவரே, அமைதி யுடனே கேளுங்கள்' 24