பக்கம்:ஈசாப் கதைப் பாடல்கள்.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



என்றே கூறிப் போர்வைதனை
எடுத்தான். உடனே கக்கத்தில்
பன்றி ஒன்று இருப்பதனைப்
பார்த்தனர் சபையில் இருந்தவர்கள்!

பன்றியைக் கையில் எடுத்தனனே;
பலரும் பார்க்கப் பிடித்தனனே;
நன்றாய்க் கேட்பீர், சபையோரே,
நானிப் பொழுது கூறுவதை.

உடைக்குள் இந்தப் பன்றியையே
ஒளித்து வைத்தேன். இதன்காதைப்
பிடித்துத் திருகி விட்டதனால்,
'பீக்பீக்' என்று கத்தியதே.

உண்மைப் பன்றி கத்துகிற
ஓசை தன்னை உணராமல்,
கண்ணை மூடித் தீர்ப்பளித்த
கனதன வான்களே, பாருங்கள்.

இப்பொழு தாயினும் கூறுங்கள்.
இதனைக் காட்டிலும் நன்றாக
எப்படி மனிதன் கத்திடுவான்?
எண்ணிப் பார்ப்பீர், சபையோரே.

25