இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
அப்போ தந்தக் காகக் கூட்டம்
என்ன செய்தது?
ஆவ லோடு ‘வருக’, ‘வருக’
என்ற ழைத்ததா?
இல்லை, இல்லை. வெள்ளை பூசி
வந்த காக்கையை
ஏதோ பறவை என்றே அவையும்
எண்ணி விட்டன!
தொல்லை கொடுக்கும் பறவை யென்று
கருதி விட்டதால்,
துரத்தித் துரத்திக் கோப மாக
விரட்டி அடித்தன.
பிறரை ஏய்க்க நினைத்துக் காகம்
வேஷம் போட்டது.
பிறந்த இனத்துப் பறவை கூடத்
துரத்தி அடித்தது.
பறந்து பறந்து இங்கும் அங்கும்
அலைந்து திரிந்தது.
பாவம், பின்னர் அந்தக் காகம்
என்ன ஆனதோ!
36