இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
எழுந்து பறக்க முயன்றன;
இறகை அடித்துப் பார்த்தன
முழுதும் தோல்வி! ஆதலால்,
மூச்சுத் திணற லானது.
உடம்பு முழுதும் தேனுமே
ஒட்டிக் கொண்டு ஈக்களை
உடும்புப் பிடியாய்ப் பிடித்தது;
உயிரை வாட்டி வதைத்தது.
சிக்கிக் கொண்ட ஈக்களோ
செய்வ தேதும் இன்றியே
மிக்க சிரமப் பட்டன.
மூச்சு நிற்கும் வேளையில்,
“ஆசை அதிகம் கொண்டதால்,
ஐயோ? இன்று நாமெலாம்
மோசம் போனோம்!” என்றன;
மிகவும் வருந்தி இறந்தன!
38