பக்கம்:ஈசாப் கதைப் பாடல்கள்.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பள்ளி தன்னில் நண்பனின்
பாடப் புத்த கத்தினை
கள்ளத் தனமாய் எடுத்துமே
கறுப்பன் வீடு வந்தனன்.

திருடி வந்த பையனைத்
திருத்தும் நோக்கம் இன்றியே,
பெருமை கொள்ள லாயினள்,
பெற்ற தாயும் மகிழ்வுடன்.

எடுத்து வந்தான் மறுமுறை
இன்னும் ஒருவன் போர்வையை.
தடுத்துத் திருத்தி டாமலே
தாயார் அன்றும் மெச்சினள்.


48