பக்கம்:ஈசாப் கதைப் பாடல்கள்.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காட்டின் நடுவே வயலிலே
கழுதை மேயக் கண்டதும்,
ஓட்டம் ஓட்ட மாகவே
ஓநாய் ஓடி வந்தது.

கண்ட வுடனே கழுதையும்
காலில் ஒன்றைத் தூக்கியே
நொண்டிக் கழுதை போலவே
நொண்டி, நொண்டி நடந்தது.

ஓநாய் அருகே வந்தது;
உற்றுக் காலைப் பார்த்தது.
“ஏனோ நொண்டி நடக்கிறீர்
என்றன் அருமை நண்பரே?”

என்று கேட்கக் கழுதையும்
எடுத்துக் கூற லானது
“அன்பு கொண்ட நண்பரே,
அந்தக் கதையைக் கேட்டிடும்.

வேலி ஒன்றைத் தாண்டியே
வேக மாக வருகையில்,
காலில் நீண்ட முள்ளுமே
கத்தி போலப் பாய்ந்தது.


55