பக்கம்:ஈசாப் கதைப் பாடல்கள்.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கூர்மை யான நகங்க ளோடு
கொடிய பற்கள் இருப்பினும்.
சோர்ந்து கீழே வீழ வைப்பேன்.
சொல்லி விட்டே செய்கிறேன்’

என்று கூறிச் சிங்கம் தன்னை
எதிர்த்து மூக்குக் காதினுள்
சென்று மென்மைப் பகுதி யாவும்
நன்கு கொட்ட லானது.

கொட்டும் வலியைத் தாங் கிடாமல்
கோபம் கொண்ட சிங்கமும்
எட்டுத் திக்கும் கிடுகிடுக்க
இரைச்சல் போட லானது.

தேனீ சிறிதும் அஞ்சி டாமல்
திரும்பத் திரும்பக் கொட்டவே,
மேனி நடுங்கி, மூளை கலங்கி
வீழ்ந்த தந்தச் சிங்கமே!

சிங்க ராஜன் தன்னை வென்ற
செருக்கி னோடு தேனீயும்
அங்கு மிங்கும் மகிழ்ச்சி யோடு
ஆடிப் பாடித் திரிந்தது.


67