இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
சிறிது நேரம் சென்ற தென்று
செப்பு தற்கு முன்னரே,
அருகில் இருந்த சிலந்தி வலையில்
ஐயோ, சிக்கிக் கொண்டதே!
பிழைத்துச் செல்ல எண்ணித் தேனீ
பின்னும் முன்னும் உடலினை
வளைத்துப் பார்த்துத் துடிது டித்து
வாடி வருந்த லானது.
சிலந்தி, தனது வலையில் வந்து
சிக்கித் தவித்து மெத்தவும்
கலங்கி நிற்கும் தேனீ தன்னைக்
களித்துத் தின்று தீர்த்தது!
வல்ல வர்க்கும் வல்ல வர்கள்
வைய கத்தில் உண்டெனச்
சொல்லு முன்னர் தெரிந்து கொண்டீர்
சுலப மாகக் கதையினால்!
68