இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
ஊரைக் காவல் செய்துவரும்
உயர்ந்த ஜாதி நாய்ஒன்று
வீரன் போலத் தலைநிமிர்ந்து
வீதியில் நடந்து சென்றதுவே.
செல்லும் போது தன்னுடைய
சிறிய குட்டி ஒன்றினையும்
மெல்ல அழைத்துச் சென்றதுவே.
வீதியில் நாய்கள் கண்டனவே.
சொறிநாய், வெறிநாய், தெருவினிலே
சோற்றுக் கலையும் நாய்களெலாம்
சிறிய குட்டியைக் கண்டதுமே
சேர்ந்து பலமாய்க் குலைத்தனவே.
குட்டி நாயைப் பார்த்தவைகள்
குலைத்ததை ஜாதி நாய்கண்டும்
சட்டை சிறிதும் செய்யாமல்
சாந்த மாகச் சென்றதுவே.
77