இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
திரும்பத் திரும்ப அந்நாயும்
திசைகள் அதிரக் குலைத்திடவே
கோபம் கொண்ட பசுஉடனே,
கூறிட லானது இப்படியே:
‘தானும் உண்ணான்; பிறருக்கும்
தருமம் செய்யான் அவன்போல
என்னைப் பார்த்துக் குலைக்கின்றாய்.
ஏனோ துரத்தி யடிக்கின்றாய்?
வைக்கோல் தின்பது உன்னுடைய
வழக்கம் இல்லை; உலகறியும்.
அப்படி யிருந்தும் வைக்கோலை
அனுதினம் தின்றே உடல்வளர்க்கும்
என்னைத் துரத்துதல் சரியாமோ
எண்ணிப் பார்ப்பாய், மடநாயே!’
80