பக்கம்:ஈசாப் கதைப் பாடல்கள்.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காற்று ஓங்கி அடித்தது.
கனத்த மழையும் பெய்தது.
ஆற்று வெள்ளம் பொருள்களை
அடித்துக் கொண்டு வந்தது.

அந்த வெள்ளம் தன்னிலே
அசைந்து, அசைந்து ஆடியே
வந்த பானை ஒன்றுமே
மண்ணி னாலே ஆனதாம்.

மண்ணில் செய்த பானையை
வந்து நெருங்க லானது,
வெண்க லத்தால் ஆனதோர்
மிக்க அழகுப் பானையாம்.


84