பக்கம்:ஈசாப் கதைப் பாடல்கள்.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இதே போல் அவர் கதைகளைக் கூறிக் கூறி, காட்டில் நடக்கும் கலகங்கள், சண்டைகள் முதலியவற்றையெல்லாம் அடக்கியிருக்கிறார்.

ஒரு சமயம், ஒரு பெரிய நகரத்தில் மக்கள் கலகம் செய்து வந்தார்கள், அவர்களுக்கு அங்கிருந்த அரசனைப் பிடிக்க வில்லை. வேறு ஓர் அரசன் வேண்டுமென்றுதான் அவர்கள் கலகம் செய்தனர்.

அப்போது, அந்தப் பெரியவர் அங்கே சென்றார். அவரிடம் கலகக்காரர்கள், “எங்களுக்கு இந்த அரசர் வேண்டாம், வேறு யாராவது அரசராக வரட்டும்” என்றனர்.

உடனே, அந்தப் பெரிவர் அவர்களுக்கு ஒரு கதை சொன்னார். ஒரு குளத்தில் சில தவளைகள் வசித்து வந்தன. அவைகள் தங்களுக்குள்ளேயே ஓர் அரசனைத் தேர்ந்தெடுக்க விரும்பவில்லை. வெளியிலிருந்து யாராவது தங்களது அரசராக வரவேண்டுமென்று கடவுளை வேண்டின.

கடவுள் அவற்றின் வேண்டுகோளுக்கு இணங்கி ஒரு நாரையை அரசனாக அனுப்பி வைத்தார். நாரை வந்ததும் ஒவ்வொரு தவளையாகப் பிடித்து விழுங்க ஆரம்பித்துவிட்டது. உடனே, அவை கடவுளிடம் திரும்பவும் முறையிட்டன. அப்போது கடவுள், “உங்களுக்குள்ளேயே ஒரு தவளையை அரசனாகத் தேர்ந்தெடுக்காமல், வெளியிலிருந்து யாராவது அரசனாக வரவேண்டும் என்கிறீர்களே, அதன் கதி இதுதான்!” என்றார்.

—இந்தக் கதையை அவர் கூறியதுமே கலகக்காரர் உண்மையை உணர்ந்தனர். வேறு ஒருவரை அரசனாக்கி, அவனால் நிலைமை மோசமாகிவிட்டால் என்ன செய்வது? ஆகையால், அவர்கள் கலகத்தை நிறுத்திவிட்டனர். சமாதானம் நிலவியது.

இப்படி அரசர்களுக்கும், மக்களுக்கும் ஏற்பட்ட பல விரோதங்களை யெல்லாம், அவர் தம்முடைய குட்டிக் கதை-

7