இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
அருகில் வேடன் வருவதை
அறிந்து பன்றி, காதினை
உருவிக் கொண்டு வேகமாய்
ஓடி மறைய லானது.
வேடன் இதனைக் கண்டனன்;
மிகவும் கோபம் கொண்டனன்;
ஓடி வந்து நாயிடம்
உள்ளம் வெம்பி உரைத்தனன்.
‘காடு முழுதும் சுற்றியே
கண்டோம் இந்தப் பன்றியை.
கேடு கெட்ட மிருகமே,
கிடைத்த பொருளை விட்டனை.’
இந்த வார்த்தை தன்னையே
இடித்து வேடன் கூறவே,
அந்த நாயும் சோகமாய்
அவனைப் பார்த்தே உரைத்தது:
‘என்னைச் சிறிய வயதிலே
இருந்து வளர்க்கும் ஐயனே,
என்னை யாரும் இதுவரை
ஏய்த்து ஓட முடிந்ததா?
96