பக்கம்:ஈச்சம்பாய்.pdf/22

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

20

ஈச்சம்பாய்


கட்டத் துவங்கினால்தான் இன்னும் பத்துப் பதினைந்து நாட்களிலாவது கூட்டை கட்டி முடிக்கலாம். கூடு இல்லாமல் கூடுவதற்கு பெண் குருவிகள் வராது என்பது இவற்றுக்குத் தெரியும்.

ஈச்சம் இலையின் முதுகுத் தண்டு போன்ற ஈர்க்குகளையும், கரும்புத் தோகை நாரையும் அலகுகளை வளைத்து நெளித்துக் கிழித்தன. கிழித்தெடுத்த நார்களை அலகு மூலம் கிளைகளில் இரண்டு பக்கமும் தொங்கும்படி சமமாகப் போட்டன. இப்படிப் பத்துப் பதினைந்து நார்களைக் குறுக்கும் நெடுக்குமாகத் தொங்கப் போட்டபின், தொங்கிய நார்களை அலகால் கவ்வி, முன்னாலும் பின்னாலும் பக்கவாட்டிலுமாகச் சுழற்றின. பம்பரம் கற்றுவதுபோல் உடம்பை வளைத்தும் நெரித்தும் கழித்தும் சர்க்கஸ்காரன் போலச் சுழன்று நார்களைச் சுழல வைத்தன. அப்பாடா! முடிச்சுகள் பதிந்து விட்டன. பிறகு, களைத்துப் போனவைபோல் கிளைகளில் அமர்ந்து, கொண்டைகளை நிமிர்த்தி லேசாக விசிலடித்தன. அப்பாடா...!

கூடு கட்டப்படும் உடைமரத்திற்கு எதிரே உள்ள திட்டில் ஆண் குருவிகள் இயங்குவதை வேடிக்கை பார்த்தபடி பெண் குருவிகள் ஜம்மென்று இருந்தன.

பத்து ஆண் குருவிகளில், எடுத்த உடனே அடையாளம் காணக்கூடிய ஒரு குருவியும் இருந்தது. மற்ற குருவிகள் தலை பழுப்பு நிற மஞ்சள் நிறத்தில் தோன்றும்போது, இதன் தலை மட்டும் பிரகாசமான மஞ்சளில் தோற்றம் காட்டியது. மார்பில் மற்றவற்றிற்கு வெளுப்பு மஞ்சள் என்றால், இதற்கு பழுப்பு மஞ்சள்.

இந்த மஞ்சள் பிரகாசிக்கு ஓர் ஆசை, எல்லா ஆசைகளுக்கும் இருப்பது போல், அந்த ஆசைக்கும் ஒரு பிரச்னை. எதிர்த்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஈச்சம்பாய்.pdf/22&oldid=1495613" இலிருந்து மீள்விக்கப்பட்டது