பக்கம்:ஈரோடு மாவட்ட வரலாறு.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18

ஈரோடு மாவட்ட வரலாறு


மற்றொரு முக்கியமான திட்டத்தையும் அந்த ஆணையம் அறிவித்தது. தாராபுரம், சத்தியமங்கலம் தாலுக்காக்கள் கோயமுத்தூர் மாவட்டத்துடனும், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த சங்ககிரி திருச்செங்கோடு தாலுக்காக்களை ஈரோடு மாவட்டத்துடனும் சேர்க்க வேண்டும் என்றும் பரித்துரை செய்தது.

சேலம் மாவட்டத்தின் சங்ககிரியையும், திருச்செங்கோட்டையும் ஈரோடு மாவட்டத்தோடு சேர்க்க சேலம் மாவட்டத்தில் கடும் எதிர்ப்பு ஏற்பட்டது. சேலம், ஈரோடு மாவட்டங்களுக்குக் காவிரியாறு இயற்கை எல்லையாக இருப்பதாலும், தொழில் வளம் மிக்க சங்ககிரி, திருச்செங்கோட்டை ஈரோட்டோடு சேர்த்தால் சேலம் மாவட்டம் மிகப் பாதிக்கப்படும் என்பதாலும் காவிரியில் சில புதுப்பாலங்கள் அமைக்க வேண்டியிருக்கும் என்பதாலும் அரசு சங்ககிரி, திருச்செங்கோடு ஆகிய தாலுக்காக்களை ஈரோடு மாவட்டத்தில் சேர்க்கும் திட்டத்தைக் கைவிட்டது.

அதற்குப் பதிலாக கோயமுத்தூர் மாவட்டத்தோடு சேர்க்க ஆணை பிறப்பிக்கப்பட்ட தாராபுரம், சத்தியமங்கலம் தாலுக்காக்களை ஈரோடு மாவட்டத்திலேயே வைந்துக் கொள்ளலாம் என்றும் முடிவு செய்யப்பட்டது. காங்கயம், பெருந்துறை, சத்தியமங்கலம் ஆகிய புதிய தாலுக்காக்கள் உருவாக்கவும் முடிவு செய்யப்பட்டது.

ஆந்திராவில் "பிரகாசம் மாவட்டம்" அமைந்திருப்பதை எடுத்துக்காட்டி கோயமுத்தூர் மாவட்டத்தைப் பிரித்து ஈரோட்டைத் தலைமையிடமாகக் கொண்டு அமைக்கப்படும் புதிய மாவட்டத்திற்குத் “தந்தை பெரியார் மாவட்டம்" என்று பெயர் சூட்டவும் முடிவு செய்யப்பட்டது. பின் பலருடைய வேண்டுகோளுக்கு இணங்கத் "தந்தை" என்ற சொல் நீக்கப்பட்டது. 17.9.1979 அன்று பெரியார் நூற்றாண்டு விழா முதல் "பெரியார் மாவட்டம்" என இயங்கும் என்ற ஆணையை அரசு 31.6.1979 அன்று பிறப்பித்தது.

17.9.1979ல் மாவட்டத் தொடக்கவிழா கோலாகலமாக ஈரோடு சி.எஸ்.ஐ மைதானத்தில் தடைபெற்றது. ஆனால் முறைப்படி 24.9.1979ல்