8
ஈரோடு மாவட்ட வரலாறு
நயம் தெரிந்தவர், தொல்லியல் - வரலாறு - இலக்கிய நாட்டம் உடையவர், ஈரோடு மாவட்ட ஆட்சியர் திரு. த. உதயச்சந்திரன் இ.ஆ.ப. அவர்கள். இந்நூலை மிகச்சிறந்த முறையில் அவர்கள் அறிமுகம் செய்து பாராட்டியிருப்பது பெருமையளிக்கிறது. அவை என் பணிகளை ஊக்கப்படுத்தும். கொங்கு மண்டலத்தின் பழமை துலக்கும் புதுமைப் படைப்புக்கள் வெளியிடப்பெறவேண்டும் எனப் பேரார்வம் கொண்டிருக்கும் அவர்களின் அணிந்துரை இந்நூலின் தோரண வாயிலாக அமைந்துள்ளது. அவர்கட்கு நெஞ்சார்ந்த நன்றி உரியதாகுக.
ஈரோடு மாவட்ட மக்களும், இளைஞர்களும், மாணவர்களும், வரலாற்றில் நாட்டமுடைய தமிழக மக்களும் இந்நூலை வரவேற்று ஆதரவளிப்பார்கள் என நம்புகிறேன்.
இந்நூலைக் குறுகிய காலத்தில் மிகச்சிறப்பாக வடிவமைத்து அச்சிட்ட ஈரோடு காயத்ரி ஆப்செட் உரிமையாளர்கட்கு என் மனமார்ந்த நன்றி உரியதாகுக.
ஈரோடு, அன்பன்
06.07.07. செ. இராசு