பக்கம்:ஈரோட்டுத் தாத்தா.pdf/11

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

9


தொண்டர்களில் நூற்றுவரை அண்ண லோடு
தொழுவத்தில் மாடுகட்டிப் போட்ட தேபோல்,
கொண்டடைத்தார் சிறையுள்ளே, மக்கள் நெஞ்சில்
கொழுந்துவிட்டு வயிறெரிய ஆட்சி யாளர்
கண்டனர்பத் தாயிரம்பேர் மறியல் செய்து
கடுஞ்சிறைக்குள் அண்ணலுடன் செல்ல, நெஞ்சில்
எண்ணினராய் நிற்கும்நிலை கண்டார் அங்கே
இடமில்லை சிறைக்குள்ளே வெளியில் விட்டார்!

காதலனின் நெஞ்சுவக்கத் தொண்டு செய்யும்
கற்புடையார் நாகம்மை யம்மை யாரும்
மாதரிடம் வீரமுண்மை காட்ட வென்றே
மாநிலத்தில் பிறந்ததங்கை கண்ணம் மாளும்
மோதிவரும் ஆர்வத்தால் இவர்கள் பின்னே
முன்னேறும் பெண்ணினமும் கள் ஒழிப்பை
ஆதரித்த ஈரோட்டுத் தாத்தா தம்பின்
அணிவகுத்துக் கிளர்ச்சிசெய்தார்! பணியைச் செய்தார்!

திருவாங்கூர் வைக்கத்தில் தெருவில் நாயைத்
திரியவிட்டுத் தமிழர்களில் ஒருவ குப்பை
வரக் கூடா தெனக்கட்டு வைத்தி ருந்தார்.
மனம்புழுங்கி மலையாளத் தலைவ ரெல்லாம்
ஒருபுரட்சி தொடங்கிடவும், சாதிப் பித்தம்
ஒங்குமுளத் திருவாங்கூர் அரசாங் கத்தார்
வருங்காலம் நினையாமல் தலைவ ரெல்லாம்
வாடத்தம் சிறைக்கூடத் தடைத்துப் போட்டார்.

நாட்டுநலம் கருதியஅத் தலைவ ரெல்லாம்
நன்றாய்ந்து தொடங்கிவிட்ட தொண்டு செய்யக்
கேட்டெழுதி ஈரோட்டிற்காள னுப்பிக்
கிளர்ச்சியினைத் தொடர்ந்துசெயப் பணித்த போதில்