பக்கம்:ஈரோட்டுத் தாத்தா.pdf/12

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

10

வீட்டில்வயிற் றுக்கடுப்பால் படுக்கை தன்னில்
விழுந்திருந்த அண்ணலவர் எழுந்துவேண்டும்
மூட்டைகட்டி நாகம்மை யாரைக் கண்டு
முடிந்தது நோய் என்றுரைத்தார்! வைக்கம் வந்தார்!

ஈவேரா வைக்கத்தில் தலைமை ஏற்றார்
இவர் வீட்டில் பலமுை றகள் தங்கி டில்லி
போவாரவ் வரசர்அதை நினைத்துப் பார்த்துப்
போய்விருந்திற்.கழைக்கவெனப் பணிக்கக் கண்டிந்
நாவேந்தர், :தீமைக்கோ? புரட்சிப்போரை
நடவாமல் தடுப்பாரோ?” என்று மக்கள்
கூவாமல் நினைக்குங்கால், அண்ணல் நன்றி
கூறியதி காரிகளையனுப்பி வைத்தார்.

உரிமைக்குப் போராடத்தொடங்கி விட்ட
உடனவரைச் சிறையிட்டார்! பின் நாகம்மை
திரு.ராமநாதனுடன் வைக்கம் வந்தார்
சிலநாளிற் சிறைப்பட்டார் இராமநாதன்!
பெருவாரிப் பெண்களுடன் அம்மையார்தாம்
பெருங்கிளர்ச்சி செய்யுங்கால் ஈரோட் டண்ணல்
ஒரு மாதம் சிறையிருந்துவிடுத லைப்பட்
டூர்விட்டு வெளியேறப் பணிக்கப்பட்டார்!

வெளியேற்றச் சட்டத்தை மீறி மீண்டும்
விளைத்தபெரும் புரட்சிகண்ட் ஆட்சி யாளர்
எளியாரின் உரிமைக்குப் பாடு பட்ட
எம்பெரியார் தலைச்சிதையில் ஆறுமாதம்
துளியேனும்,அருளின்றி அடைத்துப் போட்டார்
தொண்டுக்குச் சளையாத நாகம்மையார்
வெளிநின்று பெருங்கிளர்ச்சி செய்ய லானார்
வெற்றிபெற்றார்! உரிமைபெற்றார் தாழ்த்தப்பட்டோர்!.