பக்கம்:ஈரோட்டுத் தாத்தா.pdf/15

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

13



சாதியால் மதத்தால் பார்ப்பான்
     சதியினால் சேர்ந்த இந்து
நீதியால் மூட பக்தி
    நிறைவினால் கெட்டி ருக்கும்
போதிலே தன்மா னத்தைப்
    புகட்டுதற் கென்று வந்த
சோதியாய் ஈரோட் டண்ணல்
    தோன்றினார் தமிழர் நாட்டில்!

மக்களைப் பிரித்து வைத்து
    மயக்கிடும் சமயத் திற்குப்
பக்கலில் நின்று பாட்டுப்
    பாடிடும் இந்நாள் ஆட்சி
சிக்கென ஒழியு மாயின்
    சிறப்புண்டு நாட்டிற் கென்று
தக்கவா றெழுதக் கண்டு
    சிறையினுள் தள்ளப் பட்டார்!

ஆரியத்தின் வைரி யாகி
    அதனாலாம் தீமை நீக்கப்
போரியக்கும் வீரன்! எங்கள்
    பொன்னாட்டுத் தந்தை! மிக்க
சீரியற்றித் தமிழ கத்தார்
    சிறப்புற வேதன் மானப்
பேரியக்கம் கண்டோன்! நல்ல.
    பெரியார் ஈரோட்டுத் தாத்தா!