பக்கம்:ஈரோட்டுத் தாத்தா.pdf/18

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

16

பாய்தமிழர் மாநாட்டைத் திருச்சியிலே
   பார்த்தவர்கள் இதுதான் அந்தத்
தூய்மனத்தார் ஈரோட்டுத் தாத்தாவின்
   நினைவெடுத்த தோற்றம் என்றார்!

கிளர்ச்சியினை அடக்கித்தம் இந்தியினைப்
   புகுத்திவிடும் கீழ்மை யான
உளவுறுதி முதலமைச்சர்க் கிருப்பதனைத்
   தமிழரெல்லாம் உணர்ந்த போதில்
தளர்ச்சியிலை எருமைத்தோல் இல்லை யெமக்
   கெனவுரைத்துத் தமிழ்வாழ் கென்று
கிளர்ந்தெழுந்தார்! பெரியாரே தலைவரெனில்
   வேறென்ன கேட்க வேண்டும்?

இந்து-தியா லாஜிக்கல் பள்ளிமுன்னும்
   முதலமைச்சர் வீட்டு முன்னும்
செந்தமிழை மீட்பதற்குச் சேர்ந்தபடை
   வீரரெலாம் சென்று நின்று
இந்திவிழ! தமிழ்வாழ்க! என முழங்கப்
   பல்லடத்துப் பொன்னு சாமி
செந்தமிழைக் காவாமல் எனக்குணவு
   செல்லாதென் றாணை யிட்டான்!

தமிழ்காக்கும் வீரரைத்தண் டிக்கவிலை
   மற்றெவர்க்குத் தண்டிப் பென்றால்
எமைவிட்டின் எதிர்நின்று வசைமொழிந்த
   தாற்செய்தோம் என்று சொன்ன
அமைச்சர்மொழி கேட்டபின்னர் ஈரோட்டுத்
   தாத்தாஒர் அறிக்கை யிட்டார்:
தமிழர்களே இனிஅமைச்சர் வீட்டின்முன்
   கிளர்ச்சியின்றித் தமிழ்காப் பீரே!