பக்கம்:ஈரோட்டுத் தாத்தா.pdf/25

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அவர்தம் ஆற்றல்


தவறுமிகச் செய்துவிட்டார். அந்நாளில்
   தமிழரெலாம்! தமிழர் நாட்டில்
சுவரிருந்தும் கூரையில்லை! வளமிகுந்தும்
   வாழ்வில்லை! சொன்னால் வெட்கம்!
பகருமிந்த நிலைமாற்றப் பிறந்திருக்கும்
   தாத்தாவின் பண்பைத் தொண்டை
அவராற்றல் தன்னைமுழு துரைக்கவெனில்
   எனக்கந்த ஆற்ற வில்லை!

எனினும்ஒரு வாறுரைப்பேன் தமிழகத்தில்
   அறிஞரென இலகு கின்றார்
அனைவருமே அவர்பேச்சைக் கேட்டபின்னர்
   தெளிவடைந்தோர்! ஆய்ந்து தத்தம்
தனிக்கருத்தைச் சொல்வதுதான் அறிவியக்கம்
   வளரவழி தானா மென்ற
நனிபெரியார் ஈரோட்டுத் தாத்தாவின்
   அறிவுவழி நடத்தல் நன்றாம்!