இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
எஸ்.நவராஜ் செல்லையா
❖
87
உணர்வின் பிடிப்பும் உங்களை மெய்ஞானத்துக்கு அழைத்துச் செல்லும்.
நீங்கள் உடலைப் பற்றிச் சிந்திக்கச் சிந்திக்கப் பல உண்மைகளைச் சந்திக்க நேரிடும். அந்த உண்மைகள் உங்களை மன நோயிலிருந்து வெளியேற்றும். உடல் நோயிலிருந்து காப்பாற்றும். உலக வாழ்க்கையை அனுபவிக்க உற்சாகம் காட்டும்.
மெல்லிசையாகத் தோன்றி, துல்லியமாக வெளிப் படுகிற வீணையின் நல்லிசை போல உங்களுக்கு எழுச்சியான வழியைக் காட்டும். வாழ்வை மீட்டுத்தரும். நான் சொல்லிய ஒன்பது இரகசியங்கள் விதியாக உங்களைக் காப்பாற்றுமென்று உறுதியாகக் கொண்டு இந்த நூலை உங்களிடம் ஒப்படைக்கிறேன்.
தெளிந்து, தேர்ந்து, வாழ்ந்து, வளம் பெறுக என்று வாழ்த்துகிறேன்.