பக்கம்:உடற்கல்வி என்றால் என்ன.pdf/197

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

195


 அவர்களின் சிறப்பான செயல் மேம்பாடுகளை செவ்வனே வளர்த்து விட முடியும்.

2 ஆ. பயன்தரு நிலை விதி:

ஒன்றைக் கற்றுக் கொள்வதிலும், கற்றலில் ஏற்படுகின்ற பயன்கள் பற்றி ஆர்வம் கொள்வதிலும், ஒருவருக்குப் போதிய பலன் எதுவும் கிடைத்துவிடாது. சிறந்த பயனைப்பெற தொடர்ந்து பயிற்சி செய்வது அவசியம்.

அத்தகைய பயிற்சியின் அவசியத்தைத் தான் பயிற்சி நிலை விதி, பெரிதாக வற்புறுத்துகிறது.

தொடர்ந்து பழக்கப்படுத்தப்பட்டு வருகிற பயிற்சியே, பெறும் பயன்களில் முழுமை பெற உதவுகிறது. இதை இரண்டாகப் பிரித்துக் காட்டுவார்கள் உளநூல் அறிஞர்கள்.

பயன்படுத்துவது (Use) பயன்படுத்தாமல் விட்டு விடுவது (Disuse) என்பதாகப் பிரிப்பார்கள்.

ஒரு காரியத்தை அல்லது செயலைச் செய்ய, துண்டலை (Stimulus) அடிக்கடி, அடுத்தடுத்து தொடுத்துக்கொண்டே வந்தால்,கொடுத்துக்கொண்டே வந்தால், அதற்கான எதிர்வினை (Response) சரியாக நடக்கும். வலிமையுடன் கிடைக்கும்.

வெளிப்புறத் தூண்டல், உட்புற எதிர்வினையை உண்டாக்கும் நரம்பு மண்டலத்தைப் பயன்படுத்தி, சிறப்பாக செயல்படச் செய்துவிடும்.இப்படி அடிக்கடிப் பழகப்பழக நளினம் பெறுகிற நாட்டியம்,இசை, சைக்கிள் ஒட்டுதல், தட்டச்சான டைப் அடித்தல் போன்ற செயல்கள் இதற்கான சான்றுகளாகும்.