டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா
241
ஆகவே, உளவியலானது உடற்கல்வியுடன் ஒருங்கிணைந்து, உலகுக்கு ஒப்பற்ற வழிகாட்டியாக அமைந்து உதவுகிறது என்பதே நாம் அறிந்து கொள்கிற நலமான பாடமாகும்.
10. உடற்கல்வியின் சமூகவியல் கொள்கைகள் (Sociological principles)
சமூக அமைப்பு
மனிதன் இரண்டு வித சக்திகளினால் உருவாக்கப்படுகிறான். ஒன்று பாரம்பரியம் (Heredity) மற்றொன்று சூழ்நிலை (Environment) என்று விளக்குகிறது. உயிரியல் நூல் (Biology).
ஆனால், உளவியல் என்பதோ, மனிதரை உடலாலும் உள்ளத்தாலும் இணையப் பெற்ற உயிராக்கம் என்று விவரிக்கிறது.
சமூக இயலோ, மனிதரைக் கூடிவாழும் சமூக மிருகம் என்று வருணிக்கிறது.
மனிதர்கள் எங்கே எப்படி வாழ்கிறார்கள் என்பதற்கான விடையைக் கூற வந்த ஒர் அறிஞர் இவ்வாறு எடுத்துரைக்கிறார். ‘மனிதர்கள் தங்களை ஒத்த உடலும் குணமும் உடைய மக்களுக்கிடையே வாழ்கின்றார்கள். அதுவே சமூக அமைப்பாக அமையப் பெற்றிருக்கின்றது.
மனிதனும் சமூகமும்:
மனிதனானவன், தன்னை ஒத்த மற்ற மனிதர்களின் நடத்தைகளுக்கு ஏற்ப அறிந்து நடந்து கொள்வதுடன், தனது நடத்தையையும் மற்றவர்கள் ஏற்று அனுசரித்து நடப்பதுபோலவும் நடந்து கொள்கிறான்.