பக்கம்:உடற்கல்வி என்றால் என்ன.pdf/91

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

89



தத்துவம் என்றால் என்ன?

தத்துவம் என்பது மனிதர்களது அனுபவங்களைப் போலவே விரித்துகிடப்பது.விளக்கம் கொடுப்பது விவரம் சேர்ப்பது.

எந்த ஒரு துறைக்கும் தத்துவம் என்பது சொந்தமல்ல. அது வாழ்வுத் துறையாக இருக்கலாம்; வாழ்வைச் சேராத துறையாகவும் இருக்கலாம்; பூமிபற்றிய துறையாக இருக்கலாம்.சந்திரன்,சூரியன்,விண்மீன்கள் போன்றவை விளையாடும் விண்வெளித் துறையாகவும் இருக்கலாம். இயற்கையானது,செயற்கையானது, மாயத்தோற்றமானது என்றுகூட அது இருக்கலாம். அவற்றிலெல்லாம் ஆழ்ந்த அறிவை மட்டும் பெறாமல், அவைபற்றிப் பூரணமாகப் புரிந்து கொள்ளும் முயற்சியே தத்துவம் என்று கூறப்படுகிறது.

ஆகவே, தத்துவம் என்பது, உலகத்திலுள்ள இயற்கையானவற்றைப் புரிந்து கொள்ளவும், ஒவ்வொன்றின் உட்பொருளைப் பற்றி எழும் ஐயங்களைப் போக்கித் தெளிவாகத் தெரிந்து கொள்ளவும் மேற்கொள்கிற அணுகுமுறைகளையே தத்துவம் என்று வித்தகர்கள் விளக்கம் கூறுகின்றார்கள்.

சாதாரண சராசரி மனிதர்களுக்கும், தத்துவவாதிகளுக்கும் உள்ள முக்கிய வேறுபாடு ஒன்றை விளக்கமாகத் தெரிந்து கொள்வோம்.

சராசரி மனிதன் ஒருவன், வாழ்க்கையில் அல்லது உலகில் நடக்கும் நிகழ்ச்சிகளை மட்டுமே பார்க்கிறான். சில சமயங்களில் பார்த்ததும் சில உணர்வுகளை வெளிப்படுத்துகிறான். அல்லது எந்த விதமான சலனமும் இன்றி இறந்துபோகிறான்.