பக்கம்:உடற்கல்வி என்றால் என்ன.pdf/97

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

95



இதிலிருந்து ஒன்றை நாம் புரிந்து கொள்கிறோம்.

உடற்கல்வி என்பது செயல்முறையை விளக்குவதுடன் நின்று விடாமல், செய்முறைகளில் ஈடுபட்டு பயிற்சி செய்வதை அதிகப்படுத்துகிறது. அதனால், உடற்கல்வி மனிதர்களுக்கு மூன்று கோணங்களாகப் பிரித்துப் பார்த்து,செயல்படத் துண்டுகிறது.

உயிரியல், உளவியல், சமூக இயல் என்று நாம் மூன்றாகக் கொள்ளலாம்.

இம்மூன்று முறைகளிலும், மனிதர்களுக்கு அதிக சந்தர்ப்பங்களை வழங்கி, திறன் நுணுக்கங்களை (Skills) வளர்த்து; அதிக சக்தியை செலவழிக்காமல் அநேக காரியங்களை திறம்படச் செய்யும் ஆற்றலைக் கற்றுக் கொடுப்பதே உடற்கல்வியின் தத்துவப் பண்புகளாக மிளிர்கின்றன.

எந்த செயலைச் செய்தால் என்ன விளைவு ஏற்படும்? எந்த முறையில் தொடர்ந்தால், எதிர்பார்ப்புக்கு மேலாகப் பயன்கள் நிறையும் என்பதாக, காரண காரியங்களை ஆராய்ந்து, கவனமாகவும், கருத்தாகவும் உடற்கல்வி கடமையை ஆற்றுகிறது.

உடற் கல்வியின் தத்துவமானது செயல் முறைக்கு உகந்ததாகவும், எளிதான நடைமுறைக்கு ஏற்றதாகவும் இருக்கிறது.

இப்படிப்பட்ட கருத்துக்களை கிரேக்கத் தத்துவ ஞானிகள் ஏற்கனவே அறிவித்திருக்கிறார்கள். அவர்கள் நோக்கமெல்லாம் தேகத்தை எப்படி பயனுள்ளதாக வளர்க்க வேண்டும் என்பதாகவே அமைந்திருந்தது.