பக்கம்:உடுமலை நாராயண கவி பாடல்கள்.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிள்ளைகளை அதிகம் பெற்றெடுக்கக்கூடாதுன்னு! பெண்களுக்குக் கர்ப்பத் தடை உண்டுபண்ண வேணுமுன்னு பேசிக் கிட்டிருந்தது அம்பது - அது உள்ளபடி நல்லதுன்னு உலகத்தில் ஆணும் பெண்ணும் ஒண்ணு ரெண்டே பெத்துக்கிட்டு எண்ணங்களை மாத்திக்கிட்டு உடல்நலம் தேடுவது அறுபது (ஓரா; எதனாலே ? அன்பே கடவுள் என்ப தெதனாலே ? - அதில் ஆன்ம சக்தி இன்பம் இருப்பதாலே சாத்திரங்கள் பொய்யென்ப தெதனாலே ? - ஏ மாத்துகிற வார்த்தையு மிருப்பதாலே சாதிமதம் இல்லையென்ப தெதனாலே ? - மனம் சமத்துவம் தானடைந்த தன்மையாலே! பொதுவுடைமை கேட்ட தெதனாலே? - தொழில் புரிந்தும் புசிப்பற்றுப் போனதாலே! நன்மையெல்லாம் தீமையான தெதனாலே? ஞானமற்ற பேச்சு நடத்தையாலே! தன்மதிப்புக் குறைவது மெதனாலே? தரங்கெட்ட சகவாச தோஷ த்தாலே! உண்மையை மறைப்பதுவு மெதனாலே? உள்ளும் புறம்பும் வேறுபட்டதாலே! எண்எழுத்தைக் கண்ணென்ப தெதனாலே? உண்மைபொய்யை உள்ளமது காண்பதாலே! - மணமகள் 139