பக்கம்:உடுமலை நாராயண கவி பாடல்கள்.pdf/182

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எல்லாம் வயிற்றுக்கு: ஆடுவதும், பாடுவதும் எதுக்கு? நய்னா எதுக்கு? ஓடுவதும், தேடுவதும் எதுக்கு? .. எல்லாம் இதுக்கு ஆடுவதும் பாடுவதும் இதுக்கு - ஜனங்க ஓடுவதும் தேடுவதும் இதுக்கு! ஏய்... மாடு மாதிரி மனுஷனை ஏத்திக்கிட்டு ரிக்ஷா இழுக்கிறது - எதுக்கு? - - - - - அது இதுக்கு நாடு விட்டு நாட்டுக்கு நாதாரிக் கூட்டமாய் நம்மவங்க போறாங்க - எதுக்கு? ... அது இதுக்கு ஆலையிலே வேலை வெட்டி செய்யாமல் ஆளுங்கள்ளாம் பண்ணுவ தெதுக்கு? ... அது, காலங் கெட்டுப் போனதாலே வரவு செலவுக்குக் கட்டுப்படியாகலே வவுத்துக்கு - இப்போ கட்டுப்படி யாகலே வவுத்துக்கு (ஆடுவ) முட்டாப் பசங்க மூளையுள்ள பசங்க முகஸ்துதி பண்ணுவது எதுக்கு? பட்டணத்தைக் காத்துக்கிட்டு தட்டுக்கெட்டு வந்த தெல்லாம் பார்பராடா பண்ணுவது எல்லாம் இதுக்கு நய்னா இதுக்கு!! சினிமாப் பாக்கிறது கூடாது அதனால் தீமையின்னு சொல்லுறாங்க எதுக்கு? 175