பக்கம்:உடுமலை நாராயண கவி பாடல்கள்.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காந்திநெறி காண வாரீர் நீதி கருணை பரிசுத்தம் நேசம் நிறைந்த நெஞ்சுடனே ஏதம் இல்லா எளிமைதனை ஏற்றுக்கொண்ட காந்திமகான். போதம் அடைந்த உலகொன்றைப் புதிதாய் அமைக்கும் நெறிகாட்டி ஒதும் அன்பை உணர்ந்திந்நாள் உய்ய வாரும் உலகீரே. தந்தை காந்தி தம்முயிரைத் தகைமை வாய்ந்த பலியாக்கித் தந்த அறத்தின் புனிதமெங்கும் தழைத்து வளர்ந்து நிழல்பரப்பி விந்தை யான புதுயுகத்தை விரைவில் வகுத்திவ் வுலகாளச் சிந்தை செய்யும் அன்புநெறி சேர வாரும் உலகீரே. நீதி இரக்கம் சமரசத்தை நிலையாய் நிறுத்தும் கருணைவள்ளல் கோதில் அருளே கொண்டுதித்துக் குணமாம் குன்றின் மீதமர்ந்த தாதை காந்தி தாமுணர்ந்த தகைமை சான்ற நெறியென்றே ஒதும் அன்பின் உயர்வெல்லாம் உணர வாரும் உலகீரே. மண்ணை விழுங்க வாய்திறக்கும் வஞ்சப் பகைத்தீக் கடப்பதற்கு வெண்ணெய்ப் பாலம் அமைப்பீரோ? வெல்லும் அருளே அணைக்குமன்றோ? எண்ணும் இதய கமலத்தில் இனிய அருளைத் தாங்கிநின்ற அண்ணல் காந்தி அன்புமுகந்து அணைக்க வாரும் உலகீரே! 28