பக்கம்:உடுமலை நாராயண கவி பாடல்கள்.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெண் : ஆண் பெண் : ஆண் : பெண் : ஆண் காதல் - காதில் இனிக்கிறது! காதல் எந்தன் மீதில் என்றால் காதல் இனிக்கிறது - தாலி கட்டிக் கொள்ளத் தட்டிக் கழித்தால் கவலைப்படுகிறது - மனது - கவலைப்படுகிறது! கட்டிக் கரும்பே கனியே! உன்னைத் ட்டிக் கழிப்பேனோ? - நேரம் காலம் பார்த்து முறையாய்ப் பெண்ணும் கேட்டுக்க வேண்டாமோ? - நாளும் பாத்துக்க வேண்டாமோ? (காதல்) காலம் நேரம் கடந்தால் இனிமேல் உனக்கு நானில்லை - அன்பே வேலி போட்ட நிலம் போலக் காக்கத் தாலி போடோனும் - கழுத்தில் மாலை சூடோனும்! எண்ணம் போலே எல்லாம் நடக்கும் எதுவும் தப்பாது - இனிமேல் எதுவும் தப்பாது - இன்னும் என்ன என்ன வேணும் கேளு என்னை இப்போது - நீயும் என்னை இப்போது (காதல்) வீட்டைக் கட்டிக் குடித்தனம் நடத்திப் பாத்துக்க வேணும் பட்டினில் மெத்தை கட்டில் அங்கே போட்டுக்க வேணும்! முகத்துக்கு மேலே முகத்தை வச்சு ஒண்னு கொடுக்க வேணும் கொடுத்ததைத் திருப்பி எடுக்க வேணும் - பிறகு தொட்டில் போட வேணும் - குழந்தையைத் துங்க வைக்க வேணும் நீயும் பாட்டுப் பாட வேணும்! (காதல்) - விவசாயி 60