பக்கம்:உணர்ச்சிமாலை.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 2 பேர் ஆதிதிராவிடர். இந்த அழகில் அங்கேயும் ஒரு குருகுலத்தை சிருஷ்டிக்க நினைக்கிறார் ஆரிய குல மகிபர். எல்லோரும் அன்னை பாரததேவியின் அருந்தவப் புதல்வர்கள் என்று கீதம் பாடிய கூட்டம் இன்று பேதம் பாடுகிறது. அதற்கு தலையாட்டும் பொம்மை களாக சில தன் மான மற்ற திராவிடரையும் துணைக் கழைக்கிறது. ய நாம்...... பரிதாபமாக... வயிற்றெரிச்சலோடு ... விழியிலே நீர்வழிய கெஞ்சுகின்றதோரணையில்...ரத்தப் பாசம் விடாமல்... மன்றாடிக் கேட்டுக் கொள்கிறோம் அந்த 57 பேரை நோக்கி!...... ஐம்பத்து ஏழுவரே !... வகுப்புவாரி பிரிதிநிதித்துவத்தை ஏளனம் செய்து... கீழ்பாக்கம் வைத்திய சாலையை கிண்டலுக்கு பயன் படுத்துகிற வெறியர் கூட்டத்தின் செயலை சற்று சீர் தூக்கிப்பாருங்கள். நீங்கள் மக்கள் கணக்கில் 97 சத விகிதத்தினர். அவர்கள் மூன்று சதவிகிதத்தினர். ஓரி யண்டல் கல்லூரியில் நீங்கள் 57 பேர், அவர்கள் 90 பேர். உங்களுக்கும், அவர்களுக்கும் உட்கார, உலவ, உல்லாசம் அனுபவிக்க உழைத்து உழைத்து உரு மாறிய-இரத்தத்தை வியர்வையாக மாற்றிய வம்சத்தவர் மூவர். அந்த மூவரையும் மூலையில் தள்ள ஆரியத்தின் மூளை அஸ்திவாரம் அமைக்கிறது. பலம் தேடிக் கொள்ள உங்களையும் பிணைத்துக் கொண்டு பேசுகிறது. ஆம்...... ஆஞ்சநேய சுக்ரீவர்களை துணைக்கழைத் துக் கொண்டு வெற்றிப் பண் பாடியது போல சர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உணர்ச்சிமாலை.pdf/37&oldid=1701841" இலிருந்து மீள்விக்கப்பட்டது