பக்கம்:உணர்ச்சிமாலை.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37 ராமசாமிகளை, சண்முகங்களை இழத்துக் கொண்டு தன் சமுதாயத்தை காத்துக்கொண்டது போல துரை சாமி அய்யங்காருக்கு உங்கள் 57 பேரின் துணை தேவை யாயிருக்கிறது. அந்த மூன்று பேரையும் மூன்று துளி நஞ்சாகக் கருதுகிறார் உங்கள் 57 பேரையும் 57 பிர பிரஹலாதர்களாக 57 கருவேப்பிலைகளாகக் கருது கிறார். நீங்கள் அறுபது பேராகுங்கள். ஆரியம் தொண் ணூறும் அந்த முனையில் நிற்கட்டும். திராவிட இன உணர்ச்சியை இனி மேலாவது, காற்றில் பறக்கவிட்டு மீளாத பழியை சுமத்திக் கொள்ளாதீர்கள். இதையே தான் நாம் அரசாங்கத்தாருக்கும் அறிவிக்க வேண்டி யுளது. கல்லூரியை விட்டு தொண்ணூறு பூணூலும், ஏன் ஐம்பத்தி ஏழுவரும், கண்ணிருந்தும் குருடராய்— காட்டுமிராண்டித் தன்மையராய் அவர்களோடுசேர்ந்து வில்க நேர்ந்தாலும்... அந்த மூவருக்காக-புது சமு தாயத்தின் அந்த அஸ்திவாரக் கற்களுக்காக...ஒரியண் டல் கல்லூரியை நடத்தும் துணிவை ஏற்றுக் கொள் ளுங்கள் என்ற கோரிக்கையை "உள்ள ஒலி"யாக்கித் தருகிறோம். எம்மை வகுப்பு வாதி என்னும்-பெரி யோரே! திராவிட இயக்கத்தாரை குறுகிய மனப் பான்மை படைத்தோர் எனக் கூறுவோரே! வகுப்பு வாரி பிரதிநிதித்துவத்தை எதிர்த்து நிற்போரே! மீண் டும் கருத்தில் பதிய வையுங்கள் அந்த எண்களை! 3, 57, 90. தி என்னு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உணர்ச்சிமாலை.pdf/38&oldid=1701842" இலிருந்து மீள்விக்கப்பட்டது