இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
49
இன்று நம் கரங்கள் கேட்கும் கரங்களாக இருக்கின்றன--நாம் அரிசி, நிதி கடன் கேட்பவர்களாக இருக்கிறோம்.
இந்த உண்மையை உணர்ந்து, இந்தச் சவாலை ஏற்று தன்னிறைவுப் பாதையில்--தன்மானப் பாதையில் நாம் வேகமாக நடைபோட வேண்டும். அந்தப் பாதை நீண்ட நெடியது. அதில் நடக்க நம்மை நாம் தயாராக்கிக் கொள்ள வேண்டும்.
நல்ல மனிதர்களாய், நற்குணமுடையோராய், புகழ் ஓங்கி எல்லா வகை ஏற்றமும் பெறத்தக்கவர்களாய் நமது சிறார்கள் வளரவேண்டும்.
★