57
நண்பர் முனுசாமி அதைச் சொன்னார். அதையும் அவர் காமராஜரிடம் தான் முதலில் சொன்னார். காவிரி திட்டத்தின் பயன்கள் பற்றி முனுசாமி பேசியதைக் கேட்ட காமராஜர்...“நீ என்ன வக்கீலா?” என்று அவரைப் பார்த்துக்கேட்டார்.
காவிரி தண்ணீர் திட்டம் நிறைவேற்றப்படயிருப்பது மகிழ்ச்சி அளிக்கக்கூடிய ஒன்றாகும்.
காவிரித் தண்ணீர் இங்கே வருவதில் ஒரு பொருத்தம் இருக்கின்றது. காவிரிக் கரையில் காவிரித் தண்ணீரைக் குடித்து வாழ்ந்தவர்கள் தான் இப்போது இப்பகுதியில் குடியேறியிருக்கிறார்கள்.
அவர்களைத் தேடி வருகிறது காவிரி நீர்.
தண்ணீர் இந்நகரில் நிரம்பத் தேவையிருக்கிறது. பல புதிய தொழில்களுக்கும் தேவையான தண்ணீரும் கிடைக்கும்.
எங்கள் தொழிற்சாலைக்கு 2 லட்சம் காலன் தண்ணீர் கொடுக்க இயலுமா என்று கேட்கிறார்கள். நம்மால் முடியவில்லையென்றால் வேறு எந்த மாநிலத்தில் தங்கள் தொழிலை துவக்கலாமென்று பார்க்கிறார்கள். தொழிற்சாலைகளுக்குத் தண்ணீர் கொடுக்கிறோமென்றால் பணம் வாங்கிக்கொண்டு தான் கொடுக்கிறோம்.
இதுபோல சென்னைத் துறைமுகத்துக்கு வருகிற கப்பல்களுக்கும் தண்ணீர் நிரம்பத் தேவைப்படுகின்றது. போதுமான தண்ணீர் இருந்தால் நாம் கொடுக்கலாம். இப்படி விலைக்கு விற்பதன் மூலம் மட்டும் வருடத்துக்கு ரூபாய் ஒரு கோடி வரை வருமானம் கிடைக்கும். இப்போது பணத்தை செலவிட்டு நாம் செய்தாலும் கிடைக்கிற வருவாயைக் கொண்டு அதைச் சரிகட்டலாம் என்பதோடு இந்தக் காவிரி நீர் திட்டம் இன்னும் பத்தாண்டுகளில் லாபகரமானதாகவும் ஆகிவிடும்.
★