பக்கம்:உணர்ச்சி வெள்ளம், அண்ணாதுரை.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68

68 அவ்வளவு துணிவாகப் கிறார்கள். நீங்கள் மட்டும் எப்படி பேசுகிறீர்கள்? என்று கேட்பார்கள். ஆகவே தான் கூறு கிறேன், இந்த நாட்டில் அவர் சாதித்த சாதனை மிகப் பெரியது. அவர் கூப்பிட்ட குரலுக்கு வாராத இளைஞர்களில்லை. இன்று பெரி யார் அவர்களின் முகத்திலே தெரிகின்ற உற்சாகமும், கனி வும் நமக்கெல்லாம் ஏற்பட்டிருக்கின்ற எழுச்சியும் வாழ்க்கை யிலே என்றோ ஒரு நாள் தான் வரும். அவர் அழைத்தால் வாராத தமிழ் மக்களில்லை. அவர் பல்லாண்டு வாழ வேண்டும். நாம் அவரை மறக் கின்ற நேரத்தில் நமக்கு ஒரு தளர்ச்சி ஏற்படுவதையும் அவரை நினைக்கின்ற நேரத்தில் ஏதோ ஒரு ஊக்கம் பிறப் பதையும் காண்கிறோம். அவரை நினைக்காத வணிகப் பெரு மக்களில்லை; தமிழ்ப் புலவர்களில்லை./- அனைவரும் அவரது பிள்ளைகள் அவருடைய பிள்ளைகள் எல்லாக் கட்சிகளிலும் இருக் கிறார்கள். அப்படி இருக்கின்ற பிள்ளைகளில் சோடையில்லை. எந்தப் பிள்ளையும் 30 வருடங்களுக்கு முன் பேசப் பயந்தவைகளை இன்று 8 வயதுச் சிறுவன் பேசிடவும் 20 வருடத்திற்கு முன் பயத்தை மூட்டி வந்தவைகள் இன்று கேலிக்குரியவைகளாக மாறியதற்கும் பெரியார் காரணமாவார். இதற்கெல்லாம் அடிப்படை அமைத்திட-பட்ட கஷ்டம் கொஞ்சமல்ல. இன்று போல் கொடிகளாலும் தோரணங் களாலும் அலங்கரித்து மாலைகள் போட்டு வரவேற்பதில்லை. அன்றெல்லாம் செருப்புத் தோரணங்களைக் கட்டியால்லவா எதிர்ப்புக்காட்டினார்கள்? அதையெல்லாம் தாங்கிக் கொள், கின்ற மனப்பக்குவம் பெற்றதினால் தான் இன்றைக்கு ஒரு மறுமலர்ச்சியைக் காணமுடிகிறது.