பக்கம்:உணர்ச்சி வெள்ளம், அண்ணாதுரை.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92

92 ஒரே மரத்தில் காய்த்தாலும் கனிகள் அளவில் பெரிய தும் சிறியதுமாகத்தான் இருக்கும். ஒரே பழத்தில் ஒரு பக்கம் புளிப்பும்-மறுபக்கம் இனிப் பும் இருப்பதுண்டு, இதைப் பற்றிக் கூறவந்த பேரறிஞர் வாங்கி 'சமத் துவம் என்பது ஒரே தன்மையுடன் இருப்பது என்றார். பலவிதமான கருத்துக்கள் அல்ல!>> இருந்தாலும் - ஒத்துப் போகும் பண்பு இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் தான் ஜனநாயகம் இயங்குகிறது. என் கருத்துக்கு நான் எவ்வளவு மதிப்புத் தருகிறேனோ அவ்வளவு மதிப்பு, பிறருடைய கருத்துக்கும் தரவேண்டும்! என் கருத்தை வலிவுபடுத்தும் வாதங்களைப் பிறர் எவ்வளவு தூரம் கேட்க வேண்டும் என்று நினைக்கிறோமோ அவ்வளவு தூரம் அவர்களது வாதத்தையும் கேட்கவேண்டும். இந்த அடிப்படையில்தான் பல நாடுகளில் அரசியல் முறை நடைபெறுகிறது. அந்த முறை இங்கே வரவேண்டும்.