இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
வாழ்த்தும் கலை
115
எனவரும் சங்க இலக்கிய அடிகள் இவ்வுண்மைக்குச் சான்று பகரும்.
சங்கத் தமிழ்ப் புலவர்கள் இயற்கையின் அடியார்களாய் வாழ்ந்த உண்மை உலகறிந்தது. வான விதியில் வலம்வரும் இருபெருஞ் சுடர்களாய் விளங்கும் ஞாயிறும் திங்களும் அவர்தம் உள்ளத்தைக் கொள்ளைகொண்ட பேரொளி - விளக்கங்களாகும். எனவே, தாம் வாழ்த்த விரும்பிய தகவுடையோரை, ‘வெங்கதிரோனும், தண்டதியமும் போல நீடு வாழ்க!’ எனவாழ்த்த முனைந்தது அவர்தம் தமிழ் நெஞ்சம்.
‘தண்கதிர் மதியம் போலவுத் தெறுசுடர்