பக்கம்:உணர்வின் எல்லை.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாரதியும்-பாரதியும்

17

‘போன தற்கு வருந்துதல் வேண்டா;

      புன்மை தீர்க்க முயலுவம் வாரீர்!’

என்று அழைக்கின்றார்.

ஆகவே, ஆகமங்களும் போற்றும் அறிவுத் தெய்வம் இந் நாட்டில் அடியெடுத்து வைக்க வேண்டுமாயின், அறியாமைப் பேயை அழிக்க வேண்டும்; மடியும் மிடியும் மடிய வேண்டும்; அன்பும், அருளும், உழைப்பும்; ஊக்கமும், நம்மவர் வாழ்வின் குறிக்கோளாக வேண்டும்.

மலர், மலர்ந்தாலன்றோ மணங்கமழும்? வண்டும் விரைந்து வரும்?