இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
‘பாடுக பாட்டே!’
29
அவளையே பார்க்கின்றனர்; குறி சொல்லும் கிழவியை அன்போடு அழைக்கின்றாள் தோழி:-
‘அகவன் மகளே! அகவன் மகளே!’
எத்தகைய அகவன் மகளாம்?
‘மனவுக்கோப் பன்ன நன்னெடுங் கூந்தல் அகவன் மகளே!’
எதற்காக இப்படி அழைக்கின்றாள்? என்ன செய்ய வேண்டுமாம்? தோழி வேண்டுகிறாள் :
‘............பாடுக பாட்டே ! இன்னும் பாடுக பாட்டே !’
எந்தப் பாட்டை?
தன் சுட்டு விரலை உயர்த்திச் சொல்லுகின்றாள் தோழி :—
‘......... அவர் நன்னெடுங் குன்றம் பாடிய பாட்டே!’
அவர் நன்னெடுங் குன்றமா! யார் அவர்!
தலைவியின் நுதல் வியர்க்கின்றது. முகம் நாணத்தால் விளக்கின்றது. நற்றாயின் கண்கள் வியப்பால் விரிகின்றன; செவிலித்தாய் ஆறுதலோடு பெருமூச்சு விடுகின்றாள் ; தோழி புன்முறுவலோடு தலைவியின் மலர்க்கரங்களைத் தடவுகின்றாள். நம் தமிழ் நாவும்,