பக்கம்:உண்மையின் தரிசனம்.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அர்ச்சனை இன்று மாலை கோவிலுக்குப் போனேன். திருநெல்வேலி வந்து மூணு நாட்கள் ஆகின்றன. நாளைக்கு மதுரைக்கு டிக்கட் வாங்கியாகி விட்டது. இன்னமும் கோவிலுக்குப் போகாமல் இருந்தால்-? சாங்கோபாங்கமாக, சட்டையைக் கழற்றிவிட்டு, மேலே அங்கவஸ்திரத்துடன் போனேன். நான் தங்கியிருக்கும் வீடு அம்மன் சன்னதித் தெருவில். ஆகவே, கோவிலுள் அம்மன் சன்னதி வாசல்வழி நுழைந்தேன். மதிலைச் சுற்றி, மாட வீதிகளில் கடைகண்ணியும் ஜனங்களும் வழிகிறார்கள். பிரம்மோத்வில்வம். வெளிக்கும்பலோடு ஒப்பிட, கோயில் உள்ளே கூட்டமே இல்லை. - இருபது வருடங்களுக்குப்பின் இப்பத்தான் வருகிறேன். தட்டினால் ஸ்வரங்கள் பாடும் தூண்களைத் தவிர கோவில் பற்றி மற்றவை தேய்ந்த ஞாபகங்கள்தாம். அனேகமாகப் புதிதாய்ப் பார்க்கிற மாதிரிதான். மற்றும் இருபது வருடங்களுக்கு முன் கோவிலுள் முதன் முறையாக நுழைந்த ஆள் வேறு. இப்போ ஆள்வேறு. என்னைத்தான் சொல்லிக்கொள்கிறேன்.