9. சி. சு. செல்லப்பா சுமார் மூன்றரை வருடங்களுக்கு முன் நான் மதுரை யில் சில நாட்கள் தங்க நேரிட்டபோது, திடீரென்று தினைத்துக்கொண்டு வத்தலக்குண்டுக்குப் பல் பிடித்து ஏறி, இறங்கி செல்லப்பா அவர்களின் வீடு விசாரித்துக்கொண்டு அடைந்து, கதவைத் தட்டினதும் அவரேதான் திறத்தார். என்னைக் கேட்ட முதல் கேள்வி- என்ன காரணம் வந்தீர்கள்?" நீண்ட காலத்துப்பின் சந்திக்கையில், முதல் பேச்சே இதுவானால் வந்தவனை அருட்டியிருக்கும். ஏது, ஒருவேளை தான் வந்திருக்கக் கூடாதோ? ஆனால் செல்லப்பாவை எனக்கு நேற்று இன்றா பழக்கம்? இப்படிக் கேட்டாரே ஒழிய, என் கைப்பெட்டியை எப்பவோ வாங்கிக்கொண்டு விட்டாரே! இதை எதற்குச் சொல்ல வந்தேனென்றால் எந்த விஷயத்திலும் அவருடைய அணுகுமுறையில் சக்கரவட்ட மீலாத ஒரு நேரடித்தனம் (Directress) வெளிச்சம் (Openness) srsfaoua (Simplicity) @aogusegšG sisař வரவேற்பு ஒரு சாம்பிள்.
பக்கம்:உண்மையின் தரிசனம்.pdf/116
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை