பக்கம்:உண்மையின் தரிசனம்.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி. சு. செல்லப்பா 琉役? அறிமுகப்படுத்தியபோது, ' என்ன நல்ல எழுத்து? எதிலும் ஒரு வக்கிர பார்வை!" என்று அவருடைய உரத்த குரலில்" ஒரு விளாக விளாசினாரே பார்க்கலாம்! அப்போது அவரிடம் எனக்குக் கண்ட நடுக்கம், நாளடைவில் அன்பும் ஆழ்ந்தி மரியாதையாகவும் மாறிவிட்டாலும் இப்பவும், எப்பவும் அவரிடம் எனக்குச் சற்றுப் பயம்தான். காரணம் அவருடைய நேர்:ை (horesty) என்று இப்போது உணருகிறேன். பரமசிவன்போல் அவர் கோபத்தின் ப்ரபையுள் நின்றார் என்று எனக்குத் தோன்றிற்று. முதல் தாக்கம் ஒற்றை நாடித் தேகம். கதர் அரைக்கை சொக்காங், கதர் வேட்டி , கையில் எப்பவும் ஒரு துணிப்பை, அனேகமாக அதில் புத்தகங் களும் எழுதுகோலும் தானிருக்கும். சற்றுக் குறுகலான நீண்ட முகத்தில் குழிவான கண்களில் கோபம் பறப்பதாக என் எண்ணம், அந்த நாளைப் பற்றிப் பேசுகிறேன். செல்லப்பா மன்னிக்கணும். அப்பே வை. கோவிந்தன் வெளியிட்டு வந்த சக்தி மாதப் பத்திரிகையின் ஆசிரியராக இருந்த தி.ஜ.ர என் கதை களை வெளியிட்டு வந்தார். அடுத்து, அந்தக் கூட்டத்தில் என் எழுத்து, பொதுவாகவோ குறிப்பிட்டோ அடிபடும் போதும் செல்லப்பாவின் அபிப்பிராயம் மாறவில்லை என் கதைகளைப்பற்றி அவரிடம் நான் வாதிக்கவில்லை, அந்தி அளவுக்கு எனக்குத் துணிச்சல் ஏது? என் பயம்தான் அதிகரித்துக்கொண்டு வந்தது. பிறகு ஒரு சமயம், புதுக் கதையுடன், "சந்திரோதயம்" (ஆசிரியர்-க.நா.சு) ஆபீசுக்குச் சென்றபோது அங்கு ஆசிரியர் குழுவில் செல்லப்பா உட்கார்ந்துகொண்டிருக் கிறார்: கதையைக் கொடுத்துவிட்டு, 'சரி என் கதை வெளி வந்தாற்போலத்தான்’ என்று நினைத்துக்கொண்டே வெளியேறினேன். என் தப்பான எடைக்கும் என் சின்னத் தனத்துக்கும் அத்தாட்சி வேறே வேண்டாம்.