பக்கம்:உண்மையின் தரிசனம்.pdf/162

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

夏莎酸 ஒா. ச. ராமாமிருதம் "இருக்கலாம் எப்பவோ...எங்கேயோ...ஒரு ஜப்பானியப் பெண் சொல்லித்தாம் இந்த நrத்ரங்கனைப்பத்தி அவளுக்குத் தோனினதை "நகத்ரங்கள் வானத்தின் சல்லடைக் கண்கள். சுவர்க்கத்தின் ஒளி அவைகளின் வழி வீசறதுன்னு.’’ நாக்கில் ஜலம் ஊறின மாதிரி நான் உஸ்னு உள்ளுக்கு இழுத்துண்டேன். "அவள் சொன்னது அழகாயிருக்கில்லே?" "ஆம், அழகை இந்த வயசிலேயே ரவிக்கத் தெரியறது ஒரு அதிர்ஷ்டம்தான்" என் தோள்மேல் அண்ணா கை போட்டுக்கொண்டார். அண்ணாகிட்ட எனக்கு ஒண்ணு ரொம்பப் புடிச்ச விஷயம் என்ன தெரியுமா? சின்னம் பையனா நடத்தமா...ார். சரி சமமாவே பேசுவார். இருவரும் நண்த்ரங்களைப் பார்த்தபடி சற்றுநேரக் மெளனம், "ஆனால் ஒண்னு ராம். இத்தனை நக்ஷத்ரங்கள் எண்ண முடியாமல் இரைஞ்சு கிடக்கு. ஆனால் இதில் இருபத்தேழுக்குத்தான் பேர் உண்டு. இந்த இருபத்திஏழின் ஆட்சிக்குள்ளேதான் உலகத்தின் அத்தினை மனுஷாளும் பிறக்கறா, வாழறா, சாகறாளாம்." அதெப்படி? அப்படியிருக்க முடியுமா அண்ணா?" "என்னத்தைக் கண்டோம்? பெரியவா, ரிஷிகள் காலத்தி லிருந்து சொல்றா, கேட்டுக்கறோம்." மறுபடியும் மெளனம். எனக்கு மனசு என்னவோ அலையறது சமாதானமாகல்லே. 'எனக்கு ஒண்னு தோணறது'ன்னேன். 饶 驶 " தரத்