பக்கம்:உண்மையின் தரிசனம்.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அதுதான் கிராமம் # 3 ஆனால் கிராமத்திலேயே, எல்லாம் வீடுகளும் இதே வாகு, மோஸ்தர்தான், கோயில் பிராகாரம் மாதிரி. 'இந்தாங்கோ மாமா, காப்பி சாப்பிடுங்க, நீங்கள் சொன்னபடியே கொஞ்சந்தான் அஸ்கா போட்டிருக்கேன்." கொஞ்சமா? வீட்டுப்படி தாண்டிவிட்டாலே, அதுவும் கிராமத்தில் என் நிறைய எங்கே அதற்குமேல் தாங்காதோ, அங்கேதான் இவர்கள் கொஞ்சம் ஆரம்பிக்கிறது. எல்லா வற்றிலும் இவர்கள் அளவுகள் பெரிது. காப்பியென்றால் ஒருகால்படி போட்டா அதற்கு டபரா என்கிற பெயரில் ஒரு அடுக்கு சொன்னாலும் கேட்கமாட்டார்கள். திணறத் திணறக் குடிச்சேயாகணும். பெரிய மனம் படைத்தவர்கள். இவர்கள் வீடுகள்போல், இவர்கள் வயற்காடுகள் மாதிரி, அவைமேல் இவர்களின் ஆகாசங்கள் போன்று சின்னதாவே எண்ணத் தெரியாது. நெல்லைக் காலால் துழாவிக்கொண்டே சமைலறையுள் நுழைகிறேன். விஜயா எரியவிட்டுக் கொண்டிருக்கும் விறகடுப்பின் ஜ்வாலையே இரவோ பகலோ சதா அங்கே தேங்கியிருக்கும் இருட்டை முடிந்தவரை கலைக்கும் வெளிச்சம் .

  • ஒ:ாங்கே: மாமா வாங்கோ

あ சந்தான மும் விஜயாவும் "கோரஸ் பாடுகிறார்கள் , வீட்டுள் நுழைந்ததும் "வாங்கோ 仄 鸟 து 2。 مترينتي متمتع மாமா கூடத்துக்கு வந்தால் 'வாங்கோ மாமா வென்னீர் கொட்டகைக்குள் ஸ்ணானத்துக்கு அடியெடுத்து வைத்தால் "வாங்கோ மாமா சமயலறையுள் நுழைந்தால் "வாங்கோ மாமா' வாசலுக்கு வாசல் வாங்கோ மாமா, ' "சும் மாத்தான். கிராமத்தில் உங்கள் தினப்படி குட்டீன் என்னென்று பார்க்க." "தாராளமாப் பாருங்கோ-டேய் மணிகண்டா, மாமா வுக்கு மனை கொண்டுவா.