பக்கம்:உண்மையின் தரிசனம்.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அம்மா 47 -பள்ளிவிட்டு வந்ததும், ஸ்லேட்டையும் புத்தகங்களை யும் வீசியெறிந்துவிட்டு அம்மா மடியில் விழுந்ததாவோ, - அடி கண்ணே! படிச்சுக் களைச்சுப் போயிட்டியா?" என்று அவள் என்னை வாரிக்கொண்டதாவோ, -சாதத்தைப் பிசைந்து எங்களுக்கு கையில் போட்ட தாவோ, -' என்ன குழந்தையை இப்படிப் போட்டு அடிக் கறேளே!’ என்று எனக்குப் பரிந்துகொண்டு வந்ததாவோ, -'நீ சமர்த்து, கெட்டிக்காரன்" என்று என்னை நேரில் பாராட்டினதாவோ, -பிறரிடம் பேருமைப்பட்டுக் கொண்டதாவோ, ஊஹாம் அதற்கெல்லாம் பாட்டிதான் சரி. வீட்டுக்குப் பாட்டி கட்டாயம் வேனும் . ஆனால் அம்மா, பாட்டியான பிறகும், பாட்டியாக இல்லை. எனக்கு ஆச்சரியமாயிருக்கும், ஏமாற்றமா யிருக்கும், ஆத்திரம் வரும்: ஆனால் ஆ, இது எனக்கு மிக்கப் பிடித்தமான சொல். சொன்ன புத்திகள், போதித்த கோட்பாடுகள், அக் சுறுத்திய கட்டுப்பாடுகள் பழக்கவழக்கங்கள் எல்லாவற் றையும் ஒரே கணத்தில் தூக்கியெறிந்து, கலகத்துக்குக் கொடி நாட்டும் சொல். ஆனால் அம்மா எதையும் வெளிக் காண்பித்துஇ கொள்ள மிாட்டாள். அது அவள் சுபாவம் • தீபாவளி சமயத்தில் தலையில் ஒரு கை எண்ணெய் வைப்பாள்